"போலீசார் தாக்கியதால் தான் வாலிபர் பலியானார்..!" மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அமைப்பினர் மனு

போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் பலியானதாக கூறி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.


கோவை: போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் பலியானதாக கூறி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.



கடந்த மாதம் 22-ம் தேதி மேட்டுப்பாளையம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு தப்ப முயன்றதாக சாகுல்ஹமீது, சையதுஇப்ராகிம் என்ற இருவரை அப்பகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக, பொதுமக்களிடம் இருந்து அந்த வாலிபர்கள் தப்ப முயன்றபோது இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்ததால் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

அவர்களை கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசார், இருவருக்கும் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்த அப்பகுதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சாகுல்ஹமீது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில், வாலிபர்கள் இருவரையும் போலீசாரிடம் ஒப்படைக்கும் போது லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருந்ததாகவும், போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால் தான் சாகுல்ஹமீது உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனையடுத்து, வாலிபர் மரணத்திற்கு காரணமான மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், மரணம் தொடர்பாக முறையான நீதி விசாரணை வேண்டியும் இன்று காலை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...